tamilnadu

img

மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் உயர்வு - ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு

மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்தி உள்ளதாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின் படி, காலாவதியாகும் மூன்றாம் தரப்பினரின் கார்களை பிரீமியம் விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது எனவும், இந்த பிரீமியம் உயர்வு மற்ற வகை வாகனங்களுக்கு மாறுபடும் என்றும் அறிவித்துள்ளது.

குறிப்பாக 1,000 சிசிக்கு கீழே உள்ள கார்கள் பிரீமியம், தற்போதுள்ள ரூ.1,850ல் இருந்து 14.5% அதிகரித்து ரூ.2,120 ஆக உயரும் எனவும் அறிவித்துள்ளது. இதே 1,000 சிசிக்கும்- 1,500 சிசிக்கும் இடையில் உள்ள கார்களுக்கு, ரூ.2,863-ல் இருந்து அதிகரிக்கப்பட்டு பிரீமியம் ரூ.3,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 1,500 சிசிக்கும் மேற்பட்ட திறன் கொண்ட ஆடம்பர கார்களுக்கு இந்த பிரீமியத்தில் தற்போதுள்ள ₹7,890-ல் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு சக்கர வாகனங்களில், 75 சிசிக்கு கீழே உள்ள வாகனங்களுக்கு புதிய மூன்றாம் நபர் பிரீமியம் 427 ரூபாயில் இருந்தது 482 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புதிய கார்கள் மற்றும் புதிய இரு சக்கர வாகனங்களுக்கான ஐந்து வருடக் கொள்கை, மூன்று ஆண்டுகால கொள்கையை ஒற்றை பிரீமியத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இதை அடுத்து, மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், மின்சார கார்கள் மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்கள் பிரீமியத்தில் 15 சதவிகித விசேஷ தள்ளுபடி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மின் ரிக் ஷாக்களுக்கான பிரீமியத்தில் உயர்வு இல்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பிரீமியம் வேறுபட்ட விகிதங்களில் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு வருகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.